திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நவம்பர் 6ஆம் தேதி பாஜக தொடக்கிய வேல் யாத்திரையை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், 500க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், பாதியில் நின்ற வேல் யாத்திரை, திருவொற்றியூர் வடிவுடை அம்மன் திருக்கோயிலில் இருந்து இன்று (நவம்பர் 8) மீண்டும் தொடங்கியது.
முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், கரு. நாகராஜன் அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட பாஜகவினருக்கு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோயில் முன்பு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் கோயில் ராஜகோபுரம் முன்பு பாஜக வண்ண பலூன்களை பறக்க விட்டு அங்கு அமைக்கப்பட்ட மேடையில் பாஜக தலைவர் முருகன் உரையாற்றினார்.