சென்னை:அதிமுகவின் சட்டப் பிரிவு இணை செயலாளர் பாபு முருகவேல். இவர், இன்று(மே22) சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமியை இழிவு படுத்தி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. அதைப் பரப்புவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவர் மீது அவதூறு: காவல் ஆணையரிடம் புகார்!
சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி மீது அவதூறு பரப்புவதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
AIADMK Advocates Wing JS R M Babu Murugavel Letter
அந்த புகார் மனுவில், எதிர்கட்சித் தலைவர், முதலமைச்சர் ஸ்டாலினிடம், அதிமுகவினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மன்றாடி கேட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.