தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 24, 2020, 6:27 PM IST

ETV Bharat / city

விமானத்தில் வந்த ஒரு கிலோ கடத்தல் தங்கம்... ரூ.50.5 லட்சம் மதிப்பு... பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.50.5 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

விமானத்தில் வந்த ஒரு கிலோ கடத்தல் தங்கம்... ரூ.50.5 லட்சம் மதிப்பு... பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்
விமானத்தில் வந்த ஒரு கிலோ கடத்தல் தங்கம்... ரூ.50.5 லட்சம் மதிப்பு... பறிமுதல் செய்த சுங்கத்துறையினர்

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட ரூ.50.5 லட்சம் மதிப்புடைய ஒரு கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தைக் கடத்திக் கொண்டுவந்த கடலூரைச் சோ்ந்த பயணியை சுங்கத்துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் நேற்று இரவு (டிச.23) சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் பரிசோதித்தனா்.

அப்போது கடலூரைச் சோ்ந்த சையத் இம்ரான் அகமது(28) என்ற பயணி மீது சுங்கத்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை நிறுத்தி, தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனா்.

அப்போது அவருடைய உள்ளாடைக்குள் ஒரு கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை சுங்கத்துறை அலுவலர்கள் கண்டுபிடித்தனா். அதன் மதிப்பு ரூ.50.5 லட்சம்.

இதையடுத்து சுங்கத்துறையினா் தங்கத்தைப் பறிமுதல் செய்து பயணியைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ABOUT THE AUTHOR

...view details