தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 14, 2021, 7:40 PM IST

ETV Bharat / city

துபாயிலிருந்து கடத்தி வந்த 863 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து கடத்தி வந்த ரூ.44 லட்சம் மதிப்புடைய 863 கிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு 2 பயணிகள் கைது செய்யப்பட்டனா்.

துபாயிலிருந்து கடத்தி வந்த 863 கிராம் தங்கம் பறிமுதல்
துபாயிலிருந்து கடத்தி வந்த 863 கிராம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனை செய்தபோது சென்னையை சேர்ந்த திருவேடத்து கனி (32), புதுக்கோட்டையை சேர்ந்த முகமது நியாஸ் (36) ஆகிய 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் அவா்களை சோதனை செய்ததில் இருவரின் உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த 863 கிராம் எடை கொண்ட தங்க பேஸ்ட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சா்வதேச மதிப்பு ரூ.44 லட்சம் ஆகும். பின்னர் இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அலுவலர்கள் 2 பயணிகளையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details