இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் புதிதாக 66 ஆயிரத்து 244 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 1704 பேர், பிகாரில் இருந்து தமிழ்நாடு வந்த ஆறு பேர், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இருவர், மத்தியப் பிரதேசம், கர்நாடகாவில் இருந்து வந்த தலா ஒருவர் என ஆயிரத்து 714 பேருக்கு இன்று வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 9 லட்சத்து 82 ஆயிரத்து 766 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 7 லட்சத்து 63 ஆயிரத்து 252 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை கண்டறிய முடிந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 14 ஆயிரத்து 470 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 2311 பேர் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 37 ஆயிரத்து 281ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 10 பேர், அரசு மருத்துவமனையில் 8 பேர் என 10 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை - 2,10,135
கோயம்புத்தூர் - 46,920
செங்கல்பட்டு - 46,275
திருவள்ளூர் - 39,900
சேலம் - 28,988
காஞ்சிபுரம் - 26,992
கடலூர் - 23,911
மதுரை - 19,402
வேலூர் - 18,875
திருவண்ணாமலை - 18,361
தேனி - 16,464
தஞ்சாவூர் - 16,109
விருதுநகர் - 15,707
தூத்துக்குடி - 15,493
கன்னியாகுமரி - 15,472
ராணிப்பேட்டை - 15,414
திருநெல்வேலி - 14,655
விழுப்புரம் - 14,363