இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையால் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான ஜிடிபி விகிதம் ஐந்து விழுக்காடாக குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று காலை மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 400 புள்ளிகள் (1.1 விழுக்காடு) குறைந்து 36 ஆயிரத்து 912 புள்ளிகளுடனும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 118 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 905 புள்ளிகளுடனும் நிலைகொண்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தையைப் பொறுத்துவரை, தகவல் தொழில்நுட்பம், மருந்துத் துறையை தவிர மற்ற துறைகள் சிவப்புப் பட்டியலுக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொதுத் துறையின் வங்கிகளின் பங்கு மதிப்பு இரண்டு விழுக்காடும், நிதிச் சேவைத் துறை 1.4 விழுக்காடும் சரிவடைந்துள்ளன.