இந்திய ரயில்வேயை தனியார்மயமாக்கல் குறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இந்திய ரயில்வே என்பது இந்திய மக்களுக்கானது, அது மக்களிடம் மட்டுமே இருக்கும், அதைத் தனியாரிடம் ஒப்படைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அடுத்த 12 ஆண்டுகளில் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் ரயில்வேயில் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த பியூஷ் கோயல், நடைமுறைத் தேவைக்காகவே சில வளர்ச்சித் திட்டங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன என்றார்.