ஏப்ரல் 1, 2020 முதல் பிஎஸ்-4 வாகன மாசுக்கட்டுப்பாடு கொள்கையை கட்டாயச் சட்டமாக மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின்னர் பிஎஸ்-4 வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிஎஸ்-4 அல்லது பிஎஸ் 6 என்றால் என்ன? BS என்றால் ஆங்கிலத்தில் பாரத் ஸ்டேஜ் எனப் பொருள். இந்தியாவிற்கு ஏற்ப இந்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வாகன மாசுக்கட்டுப்பாடு கொள்கை. இதில் பிஎஸ் 6 (BS-VI) என்பது அச்சட்டத்தின் வீரியத்தை உணர்த்துகிறது. இதனால் வரையில் நாம் பிஎஸ்-4 ரக வாகனங்களைப் பயன்படுத்தி வந்தோம்.
இந்த பிஎஸ்-4 ரக வாகனங்களைவிட, பிஎஸ்-6 ரக வாகனங்கள் குறைவான மாசை ஏற்படுத்தும். பிஎஸ்-6 வாகனத்திலிருந்து வெளியேறும் புகையில் உள்ள சல்பர் என்னும் அமிலத்தன்மை குறைவு. மேலும், வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் பிஎஸ் 6 வாகனத்தில் 80 சதவிகிதம் குறைவு.