தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவலர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய எஸ்.பி!
தர்மபுரி காவல்துறை சார்பில் காவலா்களின் குழந்தைகளுக்கு இரண்டு லட்சத்து 47ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையை காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் வழங்கினார்.
SP Praveen Kumar provided scholarships to the children of the Police
இந்நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகள் மொத்தம் 19 பேருக்கு மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் வழங்கினார்.
இதில், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் அண்ணாமலை, புஸ்பராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.