தமிழ்நாடு

tamil nadu

நாகர்கோவிலில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By

Published : Aug 26, 2020, 7:58 PM IST

Published : Aug 26, 2020, 7:58 PM IST

SDPI Party protest in nagarcoil
SDPI Party protest in nagarcoil

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் மதிப்பீடு தாக்க வரைவு அறிக்கை, கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தங்கள் போன்றவற்றை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் மாநில அளவில் துண்டுப்பிரசுர பிரச்சாரம், வீதி நாடகங்கள், மக்கள் திரள் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.26) நாகர்கோவில் மாவட்ட அலுவலகம் எதிரே மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், ஆபத்தான சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் ஏழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details