மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் மதிப்பீடு தாக்க வரைவு அறிக்கை, கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தங்கள் போன்றவற்றை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் மாநில அளவில் துண்டுப்பிரசுர பிரச்சாரம், வீதி நாடகங்கள், மக்கள் திரள் நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.26) நாகர்கோவில் மாவட்ட அலுவலகம் எதிரே மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.