நாமக்கல் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சக்திகணேசன் நேற்று (ஜூலை12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "கரோனா பாதிப்பு உள்ள இந்தக் காலக்கட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் தலைமையில் தொற்று பரவுதலை தீவிரமாக தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பொதுமக்களுடன் சுமூகமாக செல்வதை ஊக்குவிக்கும் வகையில் மனநலப் பயிற்சிகள் அளிக்கப்படும். தற்போதைய கரோனா காலத்திலும் குற்றத்தடுப்பு, சட்ட ஒழுங்கு பணிகள், மகளிர் நலன்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
சமூக காவல் பணி மூலம் பொதுமக்களிடம் சுமூக உறவோடு காவல் பணி மேற்கொள்ளப்படும். கரோனா காலத்தில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.