ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை மூலம் கீழ்பவானி வாய்க்கால், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால் என இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.
பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு!
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும் நீர் இருப்பு 32.8 டிஎம்சியாக உள்ளது. தற்போது அணையில் 80 அடி நீர்மட்டம் இருப்பாக உள்ளதால் காலிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் முதல் பாசனத்துக்கு தண்ணீர் கேட்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று முதலமைச்சர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு தண்ணீர் முதலில் 200 கன அடியாகவும் படிப்படியாக 500 கன அடியாகவும் திறந்துவிடப்படும். முதல்கட்டமாக நேற்று 200 கன அடிநீர் மின்சார உற்பத்தி கால்வாய் வழியாக திறந்தவிடப்பட்டது. காலிங்கராயன் வாயக்காலுக்கு வருகிற 28.10.2020 வரை தண்ணீர் படிப்படியாக திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.