உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் மூன்றாம் கட்ட சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மிகத் தீவிரமடைந்து வருகின்ற கரோனா தொற்றின் காரணமாக நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் 700க்கும் மேற்பட்ட இடங்கள் அதிக பாதிப்பைக் கொண்டிருக்கும் சிவப்பு குறியீட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 பேரிடம் கோவிட்-19 கண்டறிதல் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மக்கள் அனைவரிடமும் கோவிட்-19 கண்டறிதல் சோதனையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.