தமிழ்நாடு

tamil nadu

அமைச்சர் கரோனா நிவாரண உதவி!

திருச்சி: கிராம மக்களுக்கு, அமைச்சர் வளர்மதி கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.

By

Published : Jun 3, 2020, 4:21 PM IST

Published : Jun 3, 2020, 4:21 PM IST

Minister Valarmathi corona Relief to people
Minister Valarmathi corona Relief to people

கரோனா ஊரடங்கின் காரணமாக ஏழை, எளிய மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இதன் காரணமாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என பலரும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சியில், அமைச்சர் வளர்மதி தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இன்று திருச்சி மாவட்டம் புங்கனூர் அருகே மலைப்பட்டி கிராமத்தில் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள் அடங்கிய தொகுப்பை அவர் வழங்கினார்.

சுமார் 200 பேருக்கு இந்தத் தொகுப்பை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழழகன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details