கரோனா ஊரடங்கின் காரணமாக ஏழை, எளிய மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இதன் காரணமாக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என பலரும் ஏழை மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சியில், அமைச்சர் வளர்மதி தனது ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார்.