தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2020, 9:31 PM IST

Updated : Jun 9, 2020, 1:50 PM IST

ETV Bharat / briefs

தருமபுரியில் புதிதாக ஐந்து பேருக்கு கரோனா

தருமபுரி: மாவட்டத்தில் இன்று புதிதாக ஐந்து பேருக்கு‌ கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Five new corona positive cases ffind in dharumapuri
Five new corona positive cases ffind in dharumapuri

தருமபுரி மாவட்டத்தில் 18 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சார்ந்த நான்கு பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்ப ரயில் மூலம் சேலம் வந்துள்ளனர். ரயில் நிலையத்தில் நான்கு பேருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கோண்டுள்ளனர். இதில் நான்கு பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து இவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தேர்வுத் துறை உயர் அலுவலர் ஒருவர் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டதன் முடிவு இன்று வெளிவந்தது.

இதில் தேர்வுத் துறை அலுவலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையத்து ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Last Updated : Jun 9, 2020, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details