தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலையில் குழந்தைகளுக்கு கரோனா

By

Published : Jul 16, 2020, 7:37 PM IST

திருவண்ணாமலை: இன்று (ஜூலை16) ஒரே நாளில் மட்டும் 212 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் மட்டும் 212 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி,
திருவண்ணாமலையில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் மட்டும் 212 பேருக்கு கரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி,

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுவரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 347 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று (ஜூலை16) புதிதாக 212 பேருக்கு கரோனா நோய்த்நோய் தொற்று உறுதியானது. அவர்களில் மூன்று பேர் குழந்தைகள் ஆவார்கள்.

இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்து 559ஆக அதிகரித்துள்ளது.

நேற்று வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1864 ஆக உள்ளது, சிகிச்சை பலனின்றி 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆடி மாத உழவுப் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

...view details