தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 30, 2020, 9:21 PM IST

Updated : Jun 30, 2020, 9:35 PM IST

ETV Bharat / briefs

சென்னையில் 537 இடங்களில் நடைபெற்ற கரோனா கண்டறிதல் மருத்துவ முகாம்!

சென்னை : கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் இன்று (ஜூன் 30) 537 மருத்துவ முகாம்கள் நடைபெற்றதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று 507 இடங்களில் கரோனா கண்டறிதல் மருத்துவ முகாம் நடைபெற்றது!
சென்னையில் இன்று 507 இடங்களில் கரோனா கண்டறிதல் மருத்துவ முகாம் நடைபெற்றது!

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்டம், தமிழ்நாட்டளவில் முதலாவது இடத்தில் உள்ளது. அங்கு 58 ஆயிரத்து 327 பேர் பாதிக்கப்பட்டும், 885 பேர் உயிரிழந்தும் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். கோவிட்-19 பாதிப்பிற்குள்ளானவர்கள் வசித்துவந்த குடியிருப்பு பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முகக் கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கோவிட்-19 கண்டறிதல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இன்று மட்டும் 15 மண்டலங்களில் 537 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

குறிப்பாக அதிக பாதிப்பு உள்ள பகுதியான அண்ணா நகர், ராயபுரம், திரு.வி.க. நகர் போன்ற இடங்களில் இன்று மட்டும் 50க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இந்த 537 மருத்துவ முகாம்களில் மொத்தம் 34 ஆயிரத்து 880 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் இரண்டாயிரத்து 536 நபர்களிடம் சிறு அறிகுறி தென்பட்டதால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் தங்களை இணைத்து பணியாற்றி வருகின்றனர். 15 மண்டலங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களை அமைச்சர்களும், மாநகராட்சி ஆணையரும் நாள்தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர்.

Last Updated : Jun 30, 2020, 9:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details