தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 12, 2020, 9:19 PM IST

ETV Bharat / briefs

தருமபுரியில் 17 பேருக்கு கரோனா உறுதி

தருமபுரி: பரிசோதனையின் முடிவில் தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஜூலை 12) 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Corona confirmed for 17 people in Dharmapuri
Corona confirmed for 17 people in Dharmapuri

தருமபுரி மாவட்டத்தில் இன்று (ஜூலை 12) 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அதியமான் கோட்டை சிவாசாலை பகுதியை சேர்ந்த பொறியாளர் . நல்லம்பள்ளி சிவாடி அங்கன்வாடி பெண் பணியாளர். சென்னையிலிருந்து கடகத்தூர்பச்சனம்பட்டி திரும்பிய மூன்று நபர்கள் சோமனஅள்ளி, புலிக்கரை பகுதியைச் சார்ந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் பென்னாகரம் ஏரியூர் தொண்டா குண்டன அள்ளி பகுதியை சேர்ந்தவர், காஞ்சிபுரம் சென்றுவந்த கடத்தூர் பகுதியைச் சேர்ந்த நபர். பாலக்கோடு பூசாரி கொட்டாய், பகுதியை சார்ந்த நபர். நல்லம்பள்ளி நெற்குந்தி ஏர்ராபையன அள்ளி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர். செம்மாண்ட குப்பம் பகுதி சார்ந்த டிரைவர். பென்னாகரம் ஏரியூர் பழையூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண் போன்றோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேசமயம் 22 வயது பெண் நாயக்கனூர் கடைமடை பகுதி பென்னாகரம். 27 வயது ஆண்சிப்ஸ் தொழிலாளி புதுப்பட்டி கடைமடை பென்னாகரம் தொற்று உள்ளவரின் தொடர்பில் இருந்தவர். 70 வயது பெண் தொற்று உள்ளவரின் தொடர்பில் இருந்தவர். 25 வயது பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்துள்ளார். பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 241 கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 94 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 146 நபர்கள் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details