தமிழ்நாடு

tamil nadu

தாம்பரம் சாலையின் தடுப்பில் கனரக லாரி மோதி விபத்து!

சென்னை: தாம்பரம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பில் கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானது, இதில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

By

Published : Sep 19, 2020, 9:52 PM IST

Published : Sep 19, 2020, 9:52 PM IST

Lorry accident
Lorry accident

சென்னை அடுத்த தாம்பரம் காந்தி சாலையில் கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி கருங்கல் ஜல்லி ஏற்றிக் கொண்டு கனரக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது.

அப்போது அதிவேகமாக வந்த லாரி, காந்தி சாலையில் சென்டர் மீடியத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரியின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது, லாரி ஓட்டுநர் லேசான காயத்துடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

லாரி சாலையின் நடுவில் சிக்கிக்கொண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிப்புக்குள்ளானது.

பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் இரண்டு மணி நேரம் போராடி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர்.

விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details