அரியலூருக்குச் சென்னையிலிருந்து வந்த இருவருக்கும், கேரளாவிலுருந்து வந்த இருவருக்கும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த ஒருவருக்கும் என மொத்தம் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூரில் மேலும் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி
அரியலூர்: இன்று மேலும் ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Ariyalur Corona case
இதனால் அரியலூரில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 379 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். 362 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாதாரண வார்டில் 15 பேரும், திருச்சி மருத்துவமனையில் இருவரும் என மொத்தம் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.