ராஜஸ்தான் மாநிலம், பிகானேர் மாவட்டத்தில் இருந்து மினிவேன் ஒன்று ஆள்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக எதிரே வந்த வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மினிவேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 15 வயது சிறுமி உள்பட மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட வாகன ஓட்டிகள், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.