அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா சிறப்பு மீட்பு விமானம், 179 தமிழர்களுடன் இன்று காலை 7.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அவர்களை அரசு அலுவலர்கள் வரவேற்றனர். இந்த விமானத்தில் 135 ஆண்கள், 37 பெண்கள், 7 சிறுவா்கள் என 179 பேர் வந்திருந்தனர்.
ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித் தவித்த 179 தமிழர்கள் மீட்பு!
சென்னை: ஐக்கிய அரபு நாடுகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த தமிழர்களில் 179 பேர் சிறப்பு மீட்பு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
வெளிநாட்டில் சிக்கித்தவித்த 179 இந்தியர்கள் மீட்பு
அனைவருக்கும் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்பு தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் 139 பேர் தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி விடுதிக்கும், 40 பேர் கட்டணம் செலுத்தி சென்னை நகர ஹோட்டலுக்கும் தனித்தனி பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.