லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பாத்ராஸ் கிராமத்தில் 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நரபலி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், " கான்பூரில் நிகழ்ந்த குற்றச்சம்பவத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள இயலாது. சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை அன்று காணாமல் போன சிறுமி, இரு தினங்களுக்கு பின்பு உடல் உறுப்புகள் நீக்கப்பட்ட நிலையில் அக்கிராமத்தில் உள்ள கோயில் அருகே சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம்: உத்தரப் பிரதேசத்தில் கொடூரம்