தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்து 3 பேர் படுகாயம்

குருகிராம்-துவாரகா எக்ஸ்பிரஸ் வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

By

Published : Mar 28, 2021, 1:56 PM IST

Gurugram-Dwarka Expressway
Gurugram-Dwarka Expressway

ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள தௌளதாபாத் அருகே, குருகிராம்-துவாரகா எக்ஸ்பிரஸ் வேயில் மேம்பாலம் ஒன்று கட்டுப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் ஒரு பகுதி, இன்று (மார்ச்.28) காலை திடீரென்று இடிந்து விழுந்தது.

இந்த இடிபாட்டில் மூன்று தொழிலாளர்கள் சிக்கி காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆந்திர எம்எல்ஏ குந்தோதி வெங்கட சுப்பையா காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details