ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள தௌளதாபாத் அருகே, குருகிராம்-துவாரகா எக்ஸ்பிரஸ் வேயில் மேம்பாலம் ஒன்று கட்டுப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதன் ஒரு பகுதி, இன்று (மார்ச்.28) காலை திடீரென்று இடிந்து விழுந்தது.
இந்த இடிபாட்டில் மூன்று தொழிலாளர்கள் சிக்கி காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.