ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின், குப்வாரா மாவட்டத்தில் உள்ள மாச்சல் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 10ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் இந்திய ராணுவத்தின் 3 வீரர்கள் மாச்சல் பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பள்ளத்தாக்கில் தவறி விழுந்த வீரர்களை மீட்கும் பணியில் மற்ற ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். மோசமான வானிலை மற்றும் கரடு முரடான பாதை உள்ளிட்ட காரணங்களால் மீட்புப் பணி கடினமாக காணப்பட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பின் இன்று (ஜன.11) அதிகாலை 04.45 மணி அளவில் தவறி விழுந்த 3 வீரர்களின் சடலங்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.