தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்த பி.டி. வாத்தி - பாய்ந்தது போக்சோ!

பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது திருமணத்தை நிறுத்துவதற்காக அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்த உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

By

Published : Jun 9, 2022, 6:42 PM IST

case filed
case filed

கர்நாடகா: கர்நாடக மாநிலம், பெலாகவியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த 44 வயதான நபர், தன்னிடம் பயின்று வந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மாணவியுடன் தனியாக இருந்தபோது புகைப்படங்களையும் எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில், மாணவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த உடற்கல்வி ஆசிரியர் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில், மாணவியுடன் இருந்த அந்தரங்கப் புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் பள்ளிக்குள்ளேயே புகுந்து, உடற்கல்வி ஆசிரியரை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் அவரை இழுத்துச்சென்று போலீசிடம் ஒப்படைத்தனர். உடற்கல்வி ஆசிரியர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலன் உடன் பிரச்சனை... மலை உச்சியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்..

ABOUT THE AUTHOR

...view details