கர்நாடகா: கர்நாடக மாநிலம், பெலாகவியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த 44 வயதான நபர், தன்னிடம் பயின்று வந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாணவியுடன் தனியாக இருந்தபோது புகைப்படங்களையும் எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில், மாணவிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த உடற்கல்வி ஆசிரியர் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில், மாணவியுடன் இருந்த அந்தரங்கப் புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார்.