சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச்.19) பறக்கும்படை அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில், கிருமாம்பாக்கம் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மினி லாரியில் வந்த செட்டாப் பாக்ஸ் பெட்டிகளை பறிமுதல் செய்து அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், 30,000 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் கொண்ட 150 பெட்டிகள் இருந்தன. அவற்றுக்கான, ஆவணங்களை சரிபார்த்தபோது உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்து தேர்தல் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.