தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 21, 2020, 2:41 PM IST

ETV Bharat / bharat

புதுச்சேரியில் ரிசர்வ் பட்டாலியன் காவல் துறையினருக்குப் பாதுகாப்புப் பயிற்சி

புதுச்சேரி: நவ. 23ஆம் தேதி மாநில ரிசர்வ் பட்டாலியன் காவல் துறையினருக்குப் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ரிசர்வ் பட்டாலியன் காவல் துறையினருக்கு பாதுகாப்பு பயிற்சி
ரிசர்வ் பட்டாலியன் காவல் துறையினருக்கு பாதுகாப்பு பயிற்சி

புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் உள்ள சட்டப்பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், பிரெஞ்சு தூதரகம் ஆகிய இடங்களில் நவ.23ஆம் தேதி மாநில ரிசர்வ் பட்டாலியன் காவல் துறையினருக்குப் பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்காக தேசிய புலனாய்வு முகாமையின் என்.எஸ்.ஜி. மேஜர் ராஜேஷ் தாக்கூர் மாநிலத்திற்கு வந்து ரிசர்வ் பட்டாலியன் காவல் துறையினருக்குப் பயிற்சி அளிக்க உள்ளார்.

இதனை முன்னிட்டு இன்று (நவ.21) சட்டப்பேரவை வளாகம், ஆளுநர் மாளிகை, தலைமைச் செயலகம், பிரெஞ்சு தூதரகம் ஆகிய இடங்களில் உதவி ஆணையர் செந்தில்முருகன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க: காவலர்களுக்குத் தற்காப்பு பயிற்சி

ABOUT THE AUTHOR

...view details