மைசூரு (கர்நாடகா): நேற்று (மே 25) மைசூருவில் உள்ள சாந்தலா வித்யா பீட வளாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோபோ ஆய்வகம் திறக்கப்பட்டது. இதற்காக ஜப்பானில் இருந்து 2 ரோபோக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரோபோக்கள் தொடர்பான திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் அதனைப் பாரமரித்து நிர்வகிப்பதற்கு, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த கல்வி நிறுவனத்தில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை, சுமார் 500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். எனவே, இந்த ரோபோ ஆசிரியர்களின் மூலம், பள்ளி மாணவர்களின் கற்றல் அளவை மேம்படுத்தவும், அவர்களின் ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இந்த ரோபோ ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரோபோ மூலமாக கற்பிக்கும் திட்டமானது, அவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.