திருவனந்தபுரம்:கேரளா மாநிலம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் புதிய சாதனை படைத்துள்ளது. கரோனா ஊரடங்குப்பின் 2022ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 1.88 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கரோனா ஊரடங்கு முன்பாக 1.83 கோடியாக இருந்தது.
கேரள சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானம் மாநில வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாகும். இந்த சுற்றுலாத்துறை கரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அதன்பின் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீள தொடங்கியது. அந்த வகையில், 2022ஆம் ஆண்டின் முடிவில் 2.63 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு, ஆலப்புழா, மலப்புரம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளன. அதேபோல எர்ணாகுளம் மாவட்டத்திற்கும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.