டெல்லி: உத்தரப் பிரதேசம் மாநிலம், பில்குவாவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில், தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சிக்கான திறன் மேம்பாட்டு மையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று (பிப். 22) தொடங்கிவைத்தார்.
விலைமதிப்பற்ற மனித உயிர்களையும், மதிப்புமிக்க பொருள்களையும் பாதுகாக்க பயிற்சிபெற்ற மனிதவளங்களை உருவாக்குவதும், தீயணைப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுமே இந்தத் திறன் மேம்பாட்டு மையத்தின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.