புதுச்சேரி: Puducherry: புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்புக்கருதி முக்கியமான சுற்றுலாப் பகுதிகளான அரவிந்த ஆசிரமம், நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் நிரந்தர காவல் துறை கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்க கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது நிதி ஒதுக்கப்பட்டு, அதற்காகப் பணிகள் தொடங்கப்பட்டன.
அந்தக் கட்டடம் புதுச்சேரி காவல் துறையினர் அணியும் தொப்பி அமைப்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது.