புதுச்சேரி: புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்ற பின்னர், பல்வேறு துறைகளில் அவர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், புதுச்சேரி இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனைக்கு இன்று(மார்ச் 5) வந்த அவர், மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
தேர்தலில் பணியாற்றுபவர்கள், நிர்வாக உயர் பதவியில் இருப்போர், கரோனா தடுப்பூசி போட அவர் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரின் இரண்டு ஆலோசகர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மேலும், ஊடகத்தினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியினை இந்த ஆய்வின்போது, அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவருடன் சுகாதார துறை செயலர், இயக்குனர், அலுவலர்கள் உடனிருந்தனர்.