புதுச்சேரி மாநிலம் துத்திப்பட்டு சர்வதேச கிரிக்கெட் மைதானம், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் மைதானங்கள் அமைக்க அங்குள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகாவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில், அலுவலர்கள் சேதராப்பட்டு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். மேலும் மைதான நிர்வாகம் பல முறைக்கேடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, மைதானத்தில் மின்துறை மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.