"பிரதம மந்திரி விவசாயிகள் உதவித்தொகையின் (PM Kiasn Samman Nidhi Scheme) இரண்டாம் தவணை நாளை(ஆக்.9) வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை மத்தியம் 12.30 மணி அளவில் காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.
நாளைய விழாவில் சுமார் 9.75 கோடி விவாசாயிகளுக்கு ரூ.19,500 கோடி மதிப்பிலான நிதியுதவி வழங்கப்படும் எனவும் திட்டத்தை தொடங்கிவைத்தப்பின் பிரதமர் மோடி பயனாளர்களிடம் உரையாற்றவுள்ளார் எனவும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் பங்கேற்கவுள்ளார்.