டெல்லி:ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவருக்குப் பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெகன் மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில், ஆந்திர மாநில முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவர் மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர். ரெட்டியின் மகன். காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011ஆம் ஆண்டு தனிக் கட்சியினை உருவாக்கினார். பின்னர் ஜெகன் மோகன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியை வழிப்படுத்தி ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடி- நுயேன் ஜுவான் புக் இடையே உச்சி மாநாடு