காத்மாண்டு: நேபாளத்தின் நேபாள்குஞ் பகுதியிலிருந்து கம்கதி நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து முகுல் மாவட்டம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பினா ஜியாரி ஆற்றில் கவிழ்ந்தது. தகவலறிந்த நேபாள ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம், அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் கவிழ்ந்த பேருந்து... 32 பேர் உயிரிழப்பு...
நேபாளத்தில் பேருந்து விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
nepal bus accident 32 died
இருப்பினும், இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். முதல்கட்ட தகவலில், உயிரிழந்தவர்களில் பலர் தசரா பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் நோக்கிச் சென்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்களில், பலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மேகாலயாவில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு