தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!

லக்னோ: 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

By

Published : Feb 8, 2021, 9:37 PM IST

girl raped in Uttar Pradesh  rape in UP  rape cases in UP  உ.பி.யில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை  உ.பி. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குகள்  உ.பி. சிறுமி பாலியல் வன்கொடுமை
girl raped in Uttar Pradesh

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள நிகோஹி காவல் எல்லைக்குட்ட கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, கடந்த பிப்.04ஆம் தேதி அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

தனக்கு நேர்ந்தை சிறுமிதன்தந்தையிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை உடனடியாக நிகோஹி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் மகேந்திர பால் அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க:சிறுமியை மணமுடித்து பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details