மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதன்படி, நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு இலவச கோவிட் தடுப்பூசியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
நாடு முழுவதும் இலவச தடுப்பூசி - மத்திய அரசுக்கு மம்தா கோரிக்கை!
நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டுமென மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய அரசுக்கு எழுப்பிய கேள்வியில், 'நாடே பெருந்தொற்றில் திணறி வரும் சூழலில் 20,000 கோடி ரூபாய் செலவில் நாடாளுமன்ற கட்டிடம் புதிதாக கட்டுவது தேவையா. தடுப்பூசி திட்டத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும் என்ற நிலையில், அதற்கு முன்னுரிமை தராமல் மத்திய அரசு செயல்படுவது மோசமானது.
பி. எம். கேர் நிவாரண நிதியில் உள்ள பணம் எல்லாம் எங்கே சென்று விட்டன. பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி, ஆக்ஸிஜன் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆனால், மத்திய அரசோ இதைக் கண்டும் காணாமலும் செயல்பட்டு வருகிறது கவலைக்குரியது' என்றார்.