புதுச்சேரி:காங்கிரஸ், திமுக துணையோடு புதுச்சேரியிலிருந்து பல்வேறு இடங்களுக்கு மதுபானம் கடத்துவது தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இன்று (அக்.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " புதுச்சேரியில் மதுபானம் கடத்தல் அதிகரித்து வருகிறது. காரைக்கால் பகுதியிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுகிறது. இதற்கு காவல்துறையும் துணை நிற்கிறது. காங்கிரஸ், திமுக துணையோடு மதுபானம் கடத்தல் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலி மதுபான தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.