கொல்கத்தா: விசாரணையின் போது குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவருடன் மென்மையாகப் பேசி நம்பிக்கையைப் பெறுவதற்காகக் கொல்கத்தா காவல்துறை, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து காவல்துறை பாணியில் புதிய விசாரணை உத்திகளைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையத்தின் அழுத்தத்தின் கீழ் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிக்கும் நடைமுறை தற்போது இல்லை. ஆனால் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவறாக நடத்துவது மற்றும் மிரட்டுவது ஆகியவை இந்தியக் காவல்துறையின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக உள்ளது. எனவே இந்த முறையை ஒழிப்பதற்காக வெளிநாட்டுக் காவல்துறையில் பயன்படுத்தும் விசாரணை நுட்பத்தைக் கொல்கத்தா லால்பஜார் காவல்துறை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் விசாரணை அமைப்புகளின் கூட்டம் லால்பஜாரில் நடைபெறுகிறது. வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்படி விசாரிக்க வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
இதுவரை, கொல்கத்தா காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்கும் முறைக்கும், அமெரிக்கக் காவல்துறையினரின் விசாரணை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. எனவே கொல்கத்தா போலீசார் அமெரிக்க விசாரணை நுட்பங்களைக் கற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.