கேரளா:கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப் புகழ் பெற்றது. இங்குள்ள தலைமை பூசாரி மேல்சாந்தி என்றழைக்கப்படுவார். மேல்சாந்தியின் பதவிக்காலம் ஒரு ஆண்டு ஆகும். தற்போது உள்ள மேல்சாந்தியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த மேல்சாந்திக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது.
குலுக்கல் முறையில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் நான்கு சீட்டுகளில் இரண்டு மடிக்கப்பட்டதாகவும், இரண்டு சுருட்டி வைக்கப்பட்டதாகவும் இருந்துள்ளது. இதனால் மேல்சாந்தி தேர்வினை ரத்து செய்யும்படி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மதுசூதன் நம்பூதிரி மனுத் தாக்கல் செய்தார்.