கர்நாடகா:பெலகாவி மாவட்டம், மூடலகி நகரில் பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடையில் சிறிய கண்ணாடி ஜார்களில் அடைத்து வைக்கப்பட்ட 7 மனித சிசுக்கள் உயிரிழந்த நிலையில் மிதந்து வந்துள்ளன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மொத்தம் ஐந்து ஜார்களில் ஏழு கருக்கள் கண்டெடுக்கப்பட்டன. சடலங்களை வீசியது யார் என்பது தெரியவில்லை. காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் மகேஷ் கோஹ்னி, ’மூடலகி நகர் பாலத்தின் அடியில், ஐந்து ஜார்களில், ஏழு மனித சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஐந்து மாத மனித சிசுக்கள். இது கரு பரிசோதனை மற்றும் கருவைக் கொல்வது சார்ந்தது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளோம்.