தமிழ்நாடு

tamil nadu

24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

By

Published : Aug 31, 2021, 3:04 PM IST

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 30 ஆயிரத்து 941 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

India COVID-19 tracker  India COVID state wise report  India COVID data  India COVID deaths  India coronavirus count  கரோனா பரவல்  கரோனா தொற்று  கரோனா எண்ணிக்கை  இந்தியா கரோனா எண்ணிக்கை  கரோனா நிலவரம்
கரோனா

புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 941 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 68 ஆயிரத்து 880ஆக உள்ளது.

மேலும் 36 ஆயிரத்து 275 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 19 லட்சத்து 59 ஆயிரத்து 680ஆக உள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.53 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 132 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 38 ஆயிரத்து 560 ஆக உயர்ந்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 30ஆம் தேதிவரை மொத்தம் 52 கோடியே 15 லட்சத்து 41 ஆயிரத்து 098 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நேற்று (ஆக 30) ஒரே நாளில் 13 லட்சத்து 94 ஆயிரத்து 573 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மாநகராட்சியில் வார்டுகள் சீரமைக்கப்படும் - அமைச்சர் கே.என். நேரு

ABOUT THE AUTHOR

...view details