தமிழ்நாடு

tamil nadu

TODAY HOROSCOPE: மே 25- இன்றைய ராசிபலன்

By

Published : May 25, 2022, 6:52 AM IST

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்போம்.

TODAY HOROSCOPE: மே 25- இன்றைய ராசிபலன்
TODAY HOROSCOPE: மே 25- இன்றைய ராசிபலன்

மேஷம் :இறுதியாக நீங்கள் யோகிகளால் ஈர்க்கப்பட்டிருக்கிறீர்கள். வாழும் கலை கல்வியில் பட்டப்படிப்பு படிப்பது, இசை, நடனம் அல்லது நீண்ட காலமாக நீங்கள் ஆர்வம் கொண்ட ஏதாவது விஷயத்தை கற்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நிறைவேற்றலாம். இந்த நாள், ஒரு நல்ல, சிறப்பான நாள், மற்றும் இனிமையான வெற்றியை கொடுக்கும் என்று தெரிகிறது.

ரிஷபம் :சோம்பலாகவும், பின்வாங்கும் மனநிலையிலும் இருப்பீர்கள். இது உங்கள் முயற்சிகளில் தாக்கங்களை ஏற்படுத்தலாம். உங்கள் சோம்பலையும் மந்தநிலையை நீக்க முயற்சியுங்கள். பிறகு நீங்கள் விரும்பிய அனைத்துமே உங்கள் கைகளுக்கு வந்து சேரும் என்பதை நிதர்சனமாக பார்ப்பீர்கள்.

மிதுனம் :இன்று, உங்கள் பணிகளை செய்து முடிக்க மூளையை கசக்கிப் பிழிய வேண்டியிருக்கும். இருந்தாலும் தாழ்மையுடன் நடந்து கொள்வதும் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உண்மையில் நீங்கள் முதலாளியாக இல்லாவிட்டாலும் கூட, அதுபோன்ற தோரணையை காட்ட வேண்டியிருக்கும். உங்கள் அசாதாரண புத்திசாலித்தனம், அபாரமான செயல்திறனாக வெளிப்பட்டு இன்று உங்களுக்கு பாதுகாப்பான அரணாக இருக்கும். குடும்பம் தான் உங்கள் வெற்றிக்கு அடித்தளம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

கடகம் :உங்கள் நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பொறுப்பும், கட்டுப்பாடும் பாராட்டப்படுவதுடன் உரிய சன்மானமும் கிடைக்கும். எதிர்காலத்தை மனதில் வைத்து சிந்திப்பீர்கள், இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கையையும் மேம்படும்.

சிம்மம் :உங்களின் செலவுகளை கட்டுப்படுத்துதல் அவசியம், இல்லையெனில் ் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். தேவையற்ற செலவுகள் செய்வதை கட்டுப்படுத்துதல் உங்களுக்கு நன்மை பயக்கும். மாலை நல்ல செய்தி இல்லம் தேடி வரும்.

கன்னி :உங்களுக்குள் மறைந்திருக்கும் கலைத்திறன் இன்று வெளிப்பட்டு உங்களுக்கான நாளை உருவாக்கும். சிறந்த கதாநாயகன் மற்றும் நகைச்சுவை நடிகர்களின் குறிப்பிடத்தக்க திறன்கள் உங்களுக்குள் இருப்பதை வெளிக் கொண்டு வர முயற்சி செய்வீர்கள். உங்கள் நகைச்சுவை உணர்வால், சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சி அடைய வைப்பீர்கள். இருப்பினும், பிற அவசர காரியங்கள் மற்றும் கடமைகளை செய்வதற்காக உங்கள் சக்தியை கொஞ்சம் சேகரித்து வையுங்கள்.

துலாம் :உங்கள் எல்லா கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும். சிறிய விஷயங்களையும் சிக்கல்களையும் பற்றி கவலைப்படும் நாளாக இன்றைய தினம் இருந்தாலும், பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் மனதை சமநிலையில் வைத்திருந்தால், வேலையில் அற்புதமான முடிவுகளை எடுக்க முடியும்.

விருச்சிகம்:நீங்கள் வெவ்வேறு விருப்பங்கள் மற்றும் மனோநிலை கொண்ட மக்களை சந்திக்கலாம். அதில் சிலர் உங்களை அதிர்ச்சியடைய செய்யலாம், வேறு சிலரோ உங்களை ஆச்சரியப்பட வைக்கலாம். சில நேரங்களில், உங்களுடைய வெற்றியை பிறர் வேறுபட்ட விதத்தில் பார்ப்பது ஏன் என்பதை புரிந்துகொள்வது கடினம். இவற்றை புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்துடன் கையால்வது நல்லது.

தனுசு :இன்று உங்களை பெருமிதப்படுத்தும் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். பரவச உணர்வால் ஆக்ரமிக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளால் நீங்கள் எடுக்கும் பணி அனைத்தும் சிறப்பாக முடியும். உங்கள் மனதில் இருந்து வரும் குரலின் மீது நம்பிக்கை வையுங்கள். அது சரியான பாதையில் உங்களை வழிநடத்தும். சர்வ வல்லமையுள்ள இறையாற்றலின் கருணை உங்கள் மேல் இருக்கிறது. இந்த நாளை நல்ல நாளாக மாற்றிக் கொள்ளவும்.

மகரம்:நாள் முழுவதும் வேலை மற்றும் பொறுப்புகளால் சூழப்பட்டிருப்பதால் ஏற்படும் அழுத்தத்தால், உங்கள் ஆற்றல் குறைந்தாலும், உங்கள் உற்சாகம் மட்டும் குறையாது. போட்டியாளர்களுடன் கடுமையாக சண்டையிட்டு கொண்டிருந்தால், நாளின் பிற்பகுதியில் மிகவும் சோர்ந்துவிடுவீர்கள். நீங்கள் சண்டையிட்டு வெற்றி பெறுவீர்கள் என்றாலும், புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு, சரியான செயல்களை செய்வீர்கள்.

கும்பம்: சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பரப்ப விரும்பும் உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும். எனினும், பிரச்சனைகள் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமானால், உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நலன்களை தியாகம் செய்ய வேண்டும். மக்கள் உங்களை அவர்கள் விருப்பப்படி செயல்படுத்த நினைக்கலாம். உதாரணமாக நீங்கள் களத்தில் முன்னணியில் நிற்பதாக உணர்ந்தாலும், பின்னால் திரும்பிப் பார்த்தால், யாரும் உங்களைப் பின்தொடராமல் இருக்கும் சூழல் ஏற்படலாம்.

மீனம்: உங்களுக்கு செலவுகள் அதிகம் இருந்த போதிலும், தேவையுள்ள செலவுகளுக்கு திட்டமிட்டு,தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். செலவுகளை கட்டுப்படுத்தி சேமித்தல் அவசியமாகும். தக்க தருணத்தில் அந்த சேமிப்பு உங்களுக்கு கைகொடுத்து உதவலாம். மாலை நேரத்தில் சுப செய்தி வரும். குழந்தைகளுடன் நேரத்தை இனிமையாக செலவு செய்வீர்கள்.

இதையும் படிங்க: கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேர்த்திருவிழா - அரியலூரில் உள்ளூர் விடுமுறை!

ABOUT THE AUTHOR

...view details