இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள டான்சிங் நல்லா பகுதியில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காணமால் போன நிலையில், ஏழு பேரின் உடல் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய நபர்களின் உடலை தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.