குஜராத் மாநிலம் ராஜ்கோட் காவல் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த நான்கு ஊடகவியலாளர்கள் 'ஸ்டிங் ஆபரேஷன்' நடத்தியுள்ளதாகவும், தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுத்ததாகவும் காவல் துறையினர்வழக்குப்பதிவு செய்துள்ளனர். நான்கு ஊடகவியலாளர்களும் உரிய அனுமதியின்றி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
டிசம்பர் 2ஆம் தேதி, தீ விபத்தில் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள் தொடர்பான செய்தியை, பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர். அதில், கைதுசெய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளுக்கும் விஐபி சிகிச்சை அளிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.