மங்களூரு விமான நிலையத்தில் ரூ .33.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சோதனை நடத்தியதில் விமான நிலைய அலுவலர்கள் ரூ .33.75 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மங்களூரு விமான நிலையத்தில் ரூ .33.75 லட்சம் தங்கம் பறிமுதல்
மங்களூரு: மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இன்று வழக்கம்போல சோதனை நடத்தப்பட்டது. இதில், பயணிகளிடமிருந்து 737 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். கொப்பாத் முகமது காலித் என்பவர் இன்று துபாயில் இருந்து மங்களூருக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்தார். இவரை சோதனை நடத்தியதில் உட்புற ஆடைகளில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.