லண்டன்:இந்தியாவைச் சேர்ந்த கீதாஞ்சலி ஸ்ரீ முதன் முறையாக சர்வதேச சிறந்த புத்தகத்திற்கான விருதான புக்கர் விருதை அவரது நாவலுக்காக பெற்றுள்ளார். இவரது நாவல் இந்தியில் Ret Samadhi எனவும் ஆங்கிலத்தில் இது மொழி பெயர்க்கப்பட்டு 'Tomb of Sand' எனவும் பெயரிடப்பட்டது. இந்நிலையில் கீதாஞ்சலி நேற்று(மே 26) லண்டனில் நடந்த புக்கர் விருது விழாவில் சிறந்த நாவலுக்கான விருதை பெற்றுக் கொண்டார்.
இந்த நாவல் ஒரு தவிர்க்க முடியாத ஒரு புத்தகம் என தேர்வாளர்கள் கூறினர். விருதுடன் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ49.09 லட்சம் பரிசுத் தொகையும் கொடுத்துள்ளனர். இந்த தொகையை கீதாஞ்சலி அவரது நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த டெய்ஸி ராக்வேல்லுடன் பகிர்ந்து கொண்டார்.