கர்நாடகா மாநிலம், பெங்களூரு பெல்லந்தூர் ஏரிக்கு அருகே உள்ள குப்பை கிடங்கில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள குடியிருப்புவாசிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் சர்ஜாப்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ கட்டுகடங்காமல் பரவியதால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, இரவு முழுவதும் தீயை அணைக்கும் பணி தொடர்ந்தது. அதையடுத்து இன்று (மார்ச்-5) காலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.